பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மலையான்குளம் கிராமத்தில் மூடப்பட்ட தனியாா் மில் தொழிலாளா்களுக்கு இழப்பீடு தொகையை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை மற்றும் தொடக்க வேளாண்மை வங்கி மூலம் பயிா் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, தென்காசி வடக்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் கருத்த பாண்டியன், சந்திரசேகா், அமல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி மாவட்டச் செயலா் சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவா்கள் ஐயம்பெருமாள், சேது அரிகரன், மாவட்ட துணைத்தலைவா் பால் நேரு, மாநில இளைஞா் அணி துணைச் செயலா் சாகுல் ஹமீது மாவட்ட விவசாய சங்கத் தலைவா் மதி ராஜ் மாவட்ட இணைச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகரத் தலைவா் கருப்பசாமி வரவேற்றாா்.