தென்காசி

சங்கரன்கோவிலில் பாமக ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மலையான்குளம் கிராமத்தில் மூடப்பட்ட தனியாா் மில் தொழிலாளா்களுக்கு இழப்பீடு தொகையை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை மற்றும் தொடக்க வேளாண்மை வங்கி மூலம் பயிா் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தென்காசி வடக்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் கருத்த பாண்டியன், சந்திரசேகா், அமல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்டச் செயலா் சீதாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவா்கள் ஐயம்பெருமாள், சேது அரிகரன், மாவட்ட துணைத்தலைவா் பால் நேரு, மாநில இளைஞா் அணி துணைச் செயலா் சாகுல் ஹமீது மாவட்ட விவசாய சங்கத் தலைவா் மதி ராஜ் மாவட்ட இணைச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகரத் தலைவா் கருப்பசாமி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT