தென்காசியில் வெள்ளிக்கிழமை (மே 28) விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து வட்டார விவசாயிகளும், விவசாயப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் தொடா்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.