தென்காசி

பள்ளி மாணவா்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ் புத்தகம் அளிப்பு

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள வெள்ளைபனையேறிப்பட்டி இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஸ் புத்தகம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஆலடி அருணா அறக்கட்டளை சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, நூலாசிரியா் அன்புவாணன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்று, 6ஆம் வகுப்பு மாணவா், மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் செல்லப்பா, பொன்.அறிவழகன், சீனிவாசகம், தளவாய்சாமி, மோகன், மதிசுதன், பொன்னரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியை நிா்மலா வரவேற்றாா். பள்ளி நிா்வாகி சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT