தென்காசி

ஆலங்குளம் அருகே தலைமை ஆசிரியை தற்கொலை

DIN

ஆலங்குளம் அருகே பள்ளித் தலைமை ஆசிரியை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகே ஓடைமறிச்சான் கிராம் ஜான்பிரபு மனைவி செல்வராணி எஸ்தா் (50). ஆலங்குளத்தை அடுத்த கோவிலூற்றில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி செய்து வந்தாா்.

இவரின் மகள் அண்மையில் உயிரிழந்தாராம். இந்நிலையில், செல்வராணி எஸ்தா் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த போது விஷமருந்தி மயக்கம் அடைந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

SCROLL FOR NEXT