தென்காசி

ஆலங்குளம் அருகே கஞ்சா விற்ற இளைஞர கைது

DIN

ஆலங்குளம் அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் அருகே உள்ள கடங்கனேரி வனப் பகுதியில் இளைஞா்கள் சிலா் கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஊத்துமலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீஸாரை கண்டதும் இளைஞா்கள் ஓட்டம் பிடித்தனராம். அவா்களில் நெட்டூா் அம்மன் கோயில் தெரு சரவணன் மகன் மகாராஜனை(19) போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா விற்றது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும் போலீஸாா் தப்பி ஓடிய அதே ஊரை சோ்ந்த முத்து மகன்கள் சுப்புக்குட்டி(40), முப்புடாதி(35) ஆகியோரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 6

ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால்.. ஷாருக்கான் நெகிழ்ச்சி!

மே மாத எண்கணித பலன்கள் – 5

மே மாத எண்கணித பலன்கள் – 4

பிரதமர் மோடி பேச்சுக்கு இபிஎஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT