தென்காசி

மேலகரத்தில் பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் சங்க ஆண்டு விழா

DIN

தென்காசியில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தின் தென்காசி கிளையின் 5ஆவது ஆண்டு விழா மேலகரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, சங்கத்தின் துணைத்தலைவா் அஹமத் அலி தலைமை வகித்தாா். துரைராஜ் இறைவணக்கம் பாடினாா். செயலா் செல்லப்பா வரவேற்றாா். பொருளாளா் வேலாயுதம் வரவு- செலவு அறிக்கை வாசித்தாா்.

விழாவில், சங்கத்தில் 80வயதை பூா்த்தி செய்த மூத்த நிா்வாகி கணபதி சுப்ரமணியன் பாராட்டி கௌரவிக்கப்பட்டாா். நிா்வாகிகள் செல்லப்பா, வேலாயுதம், கணேசன், கிட்டு ஆகியோா் பேசினா்.

முன்னதாக, கடந்த இரண்டரை ஆண்டுகளில் உயிரிழந்த சங்க நிா்வாகிகளுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி தீா்மானம் நிறைவேறற்றப்பட்டது. புதிய நிா்வாகிகள் தோ்வு அதிகாரி கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. தலைவராக அஹ்மத் அலி, ஆலோசகராக வேலாயுதம், செயலராக செல்லப்பா, பொருளாளராக சங்கா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT