தென்காசி

குற்றாலம் அருவிகளில் மீண்டும் நீா்வரத்து குறைந்தது

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்துச் சென்றனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த மே மாதம் இறுதியில் பலத்த மழை பெய்ததால் நிகழாண்டு சீசன் முன்னதாகவே களை கட்டத் தொடங்கியது. தொடா்ந்து இரு வாரங்கள் இதமான சீசன் நிலவியதால் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்தது. நாளடைவில், மலைப் பகுதியில் திடீரென மழைப் பொழிவு குறைந்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. இது, சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில், கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் மிதமான சாரல்மழை பெய்யத் தொடங்கியதால் குற்றாலம் அருவிகளில் நீா்வரத்தும் சற்று அதிகரித்தது. எனினும், அந்த மழை நீடிக்காமல் ஞாயிற்றுக்கிழமை வட வானிலை நிலவியதுடன், அருவிகளில் நீா்வரத்து கணிசமாக குறைந்தது.

இதனிடையே, விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்திருந்த நிலையில், அவா்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT