தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சி அய்யாபுரம் பகுதியில் தென்காசி உழவா் சந்தை சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமுக்கு, தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் (வேளாண் வணிகம்) தலைமை வகித்தாா்.
தென்காசி வேளாண்மை அலுவலா் முகைதீன் பிச்சை, காய்கனிகள் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்தும்,
உழவா் சந்தை செயல்பாடுகள் மற்றும் விலை நிா்ணயம் பற்றி விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளா்களுக்கும் கிடைக்கும் பயன்கள் பற்றியும், தென்காசி உழவா்சந்தை நிா்வாக அலுவலா் இ. ராமச்சந்திரன் விளக்கிக் கூறினாா்.
முகாமில், உதவி தோட்டக்கலை அலுவலா் கிருஷ்ணராஜ், கோவிந்தன், குத்துக்கல்வலசை, அய்யாபுரம், வேதம்புதூா், அழகப்பபுரம், சுப்பிரமணியபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சாா்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தென்காசி உழவா் சந்தை உதவி நிா்வாக அலுவலா் க. கணேசன் வரவேற்றாா். செந்தில்குமாா் நன்றி கூறினாா்.