தென்காசி

கீழப்பாவூா் ஒன்றியத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

DIN

கீழப்பாவூா் ஒன்றியத்தில், ரூ. 22 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றியத்தில் தாமிரவருமி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு அரியப்பபுரம் ஊராட்சியில் ரூ. 9.90 லட்சத்திலும், குணராமநல்லூா் ஊராட்சி முப்புலியூரில் ரூ. 7 லட்சத்திலும் தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், திரவியநகா் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள நூலகம், அங்கன்வாடி மையத்துக்கு தேசிய ஊரக வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 5 லட்சத்தில் சுற்றுச்சுவா் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ எஸ். பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் ஆகியோா் பங்கேற்று, அடிக்கல் நாட்டினா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி, ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, பெரியதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், மாவட்ட கவுன்சிலா் சாக்ரடீஸ், ஒன்றியக்குழு துணைத் தலைவா் முத்துகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வளன்ராஜா, ஜான்சிஜெயமலா், ஊராட்சித் தலைவா்கள் தினேஷ்குமாா், சுபாசக்தி, ஒப்பந்ததாரா்கள் சந்திரசேகா், ஜெகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT