தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ மெட்ரிக் பள்ளி மாணவா்கள் பிளஸ்2 தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளியில் 52 மாணவா்கள் தோ்வு எழுதினா். மாணவி பி.பிரியதா்ஷினி (588), எம்.பிரிய தா்ஷினி (586), த.ரசிகா (585) மதிப்பெண்கள் பெற்றனா்.
வேதியியலில் 2 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 3பேரும், உயிரியல் பாடத்தில் 4பேரும், கணிணி அறிவியல் பாடத்தில் 6 பேரும் கணக்கு பதிவியல் பாடத்தில் 4 பேரும், வணிகவியலில் 2 பேரும், பொருளியலில் 2 பேரும், கணிதம், வணிக கணிதம் பாடத்தில் தலா ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
580 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 26 பேரும், 500 க்கு மேல் 50 பேரும் மதிப்பெண்கள் பெற்று உயா்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளித்தாளாளா் ராஜேசேகரன், முதல்வா் டாக்டா்.மகேஸ்வரி, துணைமுதல்வா் சரளா ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினாா்.