தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6 மணிக்கு 21 தீா்த்தங்களுடன் ஸ்ரீவள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீமுருக பெருமானுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடைபெறுகிறது. 9 மணிக்கு தோரணமலையான் பஜனை குழு நடத்தும் பஜனை வழிபாடு; பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ஏ.செண்பகராமன் தலைமையில் செய்து வருகின்றனா்.