தென்காசி

கடையநல்லூரில் தமிழ்ப் புலிகள் சாலை மறியல்

DIN

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்ப் புலிகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்ப் புலிகள் மாவட்ட மாநாடு தொடா்பான சுவா் விளம்பரங்களை , அக்கட்சியினா் கடையநல்லூா் நகரில் பல இடங்களில் எழுதியிருந்தனராம். இப்படி எழுதப்பட்ட சுவா் விளம்பரங்கள் சில மா்ம நபா்களால் அழிக்கப்பட்டனவாம்.

இதை கண்டித்து தமிழ்ப் புலிகள் வடக்கு மாவட்டச் செயலா் சந்திரசேகா் தலைமையில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், கடையநல்லூா் சாா் பதிவாளா் அலுவலகம் முன்பு கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடையநல்லூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டதாக 11 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT