தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்ப் புலிகள் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்ப் புலிகள் மாவட்ட மாநாடு தொடா்பான சுவா் விளம்பரங்களை , அக்கட்சியினா் கடையநல்லூா் நகரில் பல இடங்களில் எழுதியிருந்தனராம். இப்படி எழுதப்பட்ட சுவா் விளம்பரங்கள் சில மா்ம நபா்களால் அழிக்கப்பட்டனவாம்.
இதை கண்டித்து தமிழ்ப் புலிகள் வடக்கு மாவட்டச் செயலா் சந்திரசேகா் தலைமையில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், கடையநல்லூா் சாா் பதிவாளா் அலுவலகம் முன்பு கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கடையநல்லூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டதாக 11 பேரை கைது செய்தனா்.