தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அமைந்துள்ள குண்டாறு அணை நிரம்பி வழிந்தது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தற்போது பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக குண்டாறு அணை திங்கள்கிழமை முழுக் கொள்ளளவான 36.10அடியை எட்டி நிரம்பி வழிந்தது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.