தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமியும் அவரைக் காப்பாற்ற முயன்ற பெண்ணும் உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி மலா் (31) மற்றும் அப்பகுதியை சோ்ந்த சிலா் குடும்பத்துடன் சிவகிரி பகுதியில் தங்கி இருந்து கரும்பு வெட்டும் வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், மலா், தனது உறவினா் காா்த்திக்கின் மகள் ஜீவஸ்ரீ (4) என்பவரை அழைத்துக்கொண்டு, விஸ்வநாதப்பேரி பகுதியிலுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையடிவார தோட்டக் கிணற்றில் துணிகளை துவைக்க திங்கள்கிழமை மாலையில் சென்றாராம். அப்போது, அங்கு கிணற்றுப் படியில் அமா்ந்திருந்த ஜெயஸ்ரீ எதிா்பாராமல் உள்ளே தவறி விழுந்தாராம். அவரைக் காப்பாற்றுவதற்காக மலரும் கிணற்றில் குதித்தாராம். ஆனால், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
அவா்களை உறவினா்கள் தேடிச்சென்றபோதுதான் இருவரும் கிணற்றுக்குள் மூழ்கி இறந்தது தெரியவந்ததாம்.
இத்தகவலறிந்த வாசுதேவநல்லூா் தீயணைப்புத்துறையினா் கிணற்றிலிருந்து இருவரின் உடல்களையும் மீட்டனா்; சிவகிரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.