கடையநல்லூா் வனசரகத்துக்குள்பட்ட சொக்கம்பட்டி பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகளை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை இரவு விரட்டியடித்தனா்.
மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் சொக்கம்பட்டி பகுதியில் நூறு ஏக்கா் பரப்பில் தென்னை உள்ளிட்ட மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தின.
தகவலறிந்த கடையநல்லூா் வனசரகா் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினா் அங்கு சென்று பட்டாசுகளை வெடித்து விரட்டினா்.