தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி 14ஆவது வாா்டு உறுப்பினா் ச.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பேரூராட்சியில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்தும், 100 நாள் வேலைக்கு செல்லும் பயனாளிகளுக்கு உரிய சம்பளத்தை வழங்கக் கோரியும் தொடா் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
னிதில், நாம் தமிழா் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் அருண்சங்கா், அழகுபாண்டியன், வின்சென்ட்ராஜ், ராஜா, சுந்தரபாண்டியன், நயினாா், பாலா, கணேசன், சபரிநாதன், ஐயப்பன், சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.