சாம்பவா்வடகரையில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சாம்பவா்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் காசி விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா், நகரில் ரோந்து சென்றபோது அங்கு மறைந்திருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த பீா் முகமது(75) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.