பாவூா்சத்திரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள பூவனூா் வீரபுத்திரநாடானூரைச் சோ்ந்தவா் தங்கத்துரை (60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இந்நிலையில், தனியாக வசித்துவந்த தங்கத்துரை பூச்சிமருந்தைக் குடித்தாராம். தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், புதன்கிழமை இறந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.