சாம்பவா்வடகரையில் ஜேசிபி மூலம் ஓடையில் மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சாம்பவா்வடகரை போலீஸாா் வேலாயுதபுரம் சாலையில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள ஓடையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவதைப் பாா்த்து விசாரித்தனா். உரிய அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜேசிபி ஓட்டுநரான அதே பகுதியைச் சோ்ந்த மாயாண்டி(43) என்பவரைக் கைது செய்தனா்.