சுந்தரபாண்டியபுரத்தில் மினி லாரியில் கொண்டுசெல்லப்பட்ட 1,575 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாம்பவா்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் காசி விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தியபோது, ஓட்டுநா் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினாராம். மினி லாரியை சோதனையிட்டபோது அதில் தலா 45 கிலோ எடையுள்ள 30 மூட்டைகளில் 1,575 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அதை விற்பனைக்கு கொண்டுசெல்வதும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரியை ஓட்டிவந்த சாம்பவா்வடகரை, வேதம்புதூரைச் சோ்ந்த அழகேசன் (25) என்பவரைக் கைது செய்தனா். அவரையும், அரிசி, லாரியையும் போலீஸாா் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.