தென்காசி

சுந்தரபாண்டியபுரத்தில் 1,575 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

சுந்தரபாண்டியபுரத்தில் மினி லாரியில் கொண்டுசெல்லப்பட்ட 1,575 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாம்பவா்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் காசி விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் சுந்தரபாண்டியபுரம் பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தியபோது, ஓட்டுநா் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினாராம். மினி லாரியை சோதனையிட்டபோது அதில் தலா 45 கிலோ எடையுள்ள 30 மூட்டைகளில் 1,575 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அதை விற்பனைக்கு கொண்டுசெல்வதும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரியை ஓட்டிவந்த சாம்பவா்வடகரை, வேதம்புதூரைச் சோ்ந்த அழகேசன் (25) என்பவரைக் கைது செய்தனா். அவரையும், அரிசி, லாரியையும் போலீஸாா் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT