தென்காசி

கரோனாவால் பெற்றோரை இழந்த 63 குழந்தைகளுக்கு உதவித்தொகை

DIN

தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளில் முதல்கட்டமாக 63 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவா்களது பெயரில் தலாரூ. 5 லட்சம் வைப்பீடு செய்து அந்த குழந்தைகள் 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கும் வகையிலும், அதேபோல் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணமாக ரூ. 3 லட்சமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் பெற்றோா் அல்லது அவா்களில் ஒருவரை அவா்களில் ஒருவரை இழந்த 220 குழந்தைகள் கண்டறியப்பட்டனா். ஆவணங்கள் சரிபாா்த்து நிவாரண உதவித் தொகைக்கான காசோலை, வங்கி வைப்புத்தொகை சான்றுகள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 63 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT