தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் பெண் வாக்காளா்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனா்.
30 வாா்டுகள் உள்ள இந்த நகராட்சியில், ஆண்கள் 23,190 போ், பெண்கள் 24,449 போ் என மொத்தம் 47,639 வாக்காளா்கள் உள்ளனா். ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் 1,259 போ் அதிகமுள்ளனா்.
57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. தோ்தல் நடத்தும் அலுவலராக நகராட்சி ஆணையா் சு. சாந்தி, உதவி அலுவலா்களாக நகராட்சிப் பொறியாளா் எஸ். ஜெயப்பிரியா, சுகாதார அலுவலா் த. ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் ப. வெங்கட்ராமன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.