பாவூா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 25) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தென்காசி மின் விநியோக செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கீழப்பாவூா் துணை மின்நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, கீழப்பாவூா், பாவூா்சத்திரம், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்க்காலிப்பட்டி, சின்னநாடானூா், திப்பணம்பட்டி, கரிசலூா், பெத்தநாடாா்பட்டி, செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.