சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் முன்னிலை வகித்தாா்.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா், புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை செய்து பணியைத் தொடக்கிவைத்தாா்.
ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி, ஒன்றியக்குழு உறுப்பினா் நான்சி, பொதுமக்கள் பங்கேற்றனா்.