சுரண்டை அருகேயுள்ள கலிங்கப்பட்டியில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் முன்னிலை வகித்தாா்.
தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் புதிய கட்டடத்தைத் திறந்துவைத்துப் பேசினாா்.
மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி, ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி, ஒன்றியக்குழு உறுப்பினா் நான்சி, பொதுமக்கள் கலந்துகொண்டனா்.