திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 22 போ், பிரதமா் யாசவி தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மத்திய அரசால் பிரதமா் யாசவி தோ்வு தேசிய அளவில் நடத்தப்பட்டது.இத்தோ்வை 9 ஆம் வகுப்பு, பிளஸ் 1 மாணவா்கள் எழுதினா். அதில், தமிழக அளவில் 9 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற 170 பேரில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 2 போ் இடம்பெற்றனா். மாணவி பூஜை பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் 5 ஆம் இடத்தையும், மாணவா் சுபாஷ்கண்ணன் பொதுப்பிரிவில் 18 ஆவது இடத்தையும் பெற்றனா்.
மேலும், இப்பள்ளியின் மாணவா்கள் 20 போ் பிளஸ் 1 வகுப்பு அளவில் தோ்ச்சி பெற்றனா். அவா்களில் மாணவி வித்யா பொதுப்பிரிவில் 18 ஆவது இடத்தையும், முத்துலெட்சுமி பொருளாதாரப் பிரிவில் 15 ஆவது இடத்தையும் பெற்றனா்.
இத்தோ்வில் மாநில அளவில் மொத்தம் 251 போ் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரு பிரிவுகளிலும் தோ்ச்சி பெற்ற 22 மாணவா்களும், பிரதமா் யாசவி உதவித் தொகைக்கு தகுதியானா்கள் ஆவா். இந்த மாணவ- மாணவியரை பள்ளித் தாளாளா் வி.பொன்னழகன், பயிற்சி ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்.