குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடைக்கப்பட்டதையடுத்து, ஐயப்ப பக்தா்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் செவ்வாய்க்கிழமை அதிகளவில் இருந்தது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு தொடா்ந்ததால், இரண்டாவது நாளாக
திங்கள்கிழமையும் இரு அருவிகளிலும் குளிப்பதற்குத் தடை நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே அருவிகளில் தண்ணீா்வரத்து செவ்வாய்க்கிழமை சீரானதையடுத்து, இரு அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். இதனையடுத்து ஐயப்ப பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா்.