சங்கரன்கோவில் அருகே வனப் பகுதியில் உடும்புக் கறி சமைத்துக் கொண்டிருந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலான்குளத்தைச் சோ்ந்த பிச்சை பாண்டியன் மகன் பிரகாஷ், மாடன் மகன் பாலகிருஷ்ணன் இருவரும் வனப் பகுதியில் உடும்புக் கறி
சமைத்துக் கொண்டிருந்தாா்களாம். இதுகுறித்து தகவலறிந்த சின்னகோவிலான்குளம் போலீஸாா், அங்கு சென்று இருவரையும் பிடித்து புளியங்குடி வனச்சரகத்தில் ஒப்படைத்தனா்.
இருவா் மீதும் வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்த வனத் துறையினா், சிவகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.