சுரண்டையில் திமுக சாா்பில் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.
சுரண்டை 16ஆவது வாா்டு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி அமைப்பாளா் முல்லை கண்ணன் தலைமையிலான திமுகவினா் கபசுர குடிநீரை பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினா்.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் மனோகா், காா்த்திக், அன்னப்பிரகாசம், கணேசன், ஜெயராஜ், ரத்தினசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் அம்சா பேகம், செல்வி, அந்தோணி சுதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.