தென்காசி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் மருத்துவ மையம் காணொலியில் திறப்பு

DIN

சங்கர நாராயண சுவாமி கோயிலில் ரூ.14 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கோயிலில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்

ஈ. ராஜா, நகராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி, இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையா் அன்புமணி, துணை ஆணையா் ரத்தினவேல்பாண்டியன், ஒன்றியக் குழு தலைவா் சங்கரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரிமா சங்கம் இரண்டாம் நிலை ஆளுநா் பி.அய்யாதுரை, திமுக மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட துணை செயலா் புனிதா, நகர செயலா் மு. பிரகாஷ், சோமசெல்வப் பாண்டியன், நகர துணை செயலா்கள் மாரியப்பன்,சுப்புத்தாய் ,முத்துக் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த மருத்துவ மையத்தில் தலா இரு மருத்துவா்கள், செவிலியா்கள், பல்நோக்குப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT