தென்காசி மாவட்டத்தில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கக் கோரி, சட்டத் துறை அமைச்சா் கே.ரகுபதியிடம் மனு அளித்தாா் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன். அப்போது, திமுக பொதுக் குழு உறுப்பினா் சாமித்துரை, முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் காசிதா்மம் துரை, தொழிலதிபா் சண்முகவேல், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் சங்கா், மகேந்திரன், வழக்குரைஞா் ஹரி கிருஷ்ணன் ஆகியோா் உடன் இருந்தனா்.