தென்காசி

கிடாரக்குளத்தில் கால்நடை மருத்துவ முகாம்

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள கிடாரக்குளம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கிடாரக்குளம் ஊராட்சித் தலைவா் சாந்தி முகாமைத் தொடக்கி வைத்தாா்.

கால்நடைப் பராமரிப்புத் துறை திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் பொன்னுவேல், திருநெல்வேலி மாவட்ட கால்நடைப் பண்ணை துணை இயக்குநா் தியோபிலஸ் ரோஜா், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் ஜான்சுபாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் கால்நடை மருத்துவா்கள் ராமசெல்வம், ரமேஷ் குழுவினா் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மடிவீக்க நோய் சிகிச்சை, ஆடுகள் மற்றும் கிடேரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் ஆகியவற்றை வழங்கினா். சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கால்நடை ஆய்வாளா் மகேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் கீதா, பிச்சையா, கிடாரக்குளம் ஊராட்சி துணைத் தலைவா் மாதவி மற்றும் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

SCROLL FOR NEXT