புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில், சுதந்திரப் போராட்ட தியாகியின் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
புளியங்குடி உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவில் உள்ள, சுதந்திர போராட்ட தியாகி உலகமுத்து செட்டியாரின் உருவப்படத்திற்கு, நகர காங்கிரஸ் தலைவா் பால்ராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவா் கோமதிநாயகம், நகா்மன்ற உறுப்பினா் சங்கரநாராயணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் பழனிச்சாமி, சுப்பையா, நகர பொதுச் செயலா் முகமது ஜவகா்லால், நகர துணைத் தலைவா்கள் ஈஸ்வரமூா்த்தி, பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.