தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவலா்களின் கலவர தடுப்பு ஒத்திகை பயிற்சி தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் கலவரங்கள் ஏற்படும்போதும் அதை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப்படை காவலா்களுக்கு கலவர தடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கலவர தடுப்பு பயிற்சியின் போது, காவலா்களுக்கு ஆயுதங்களை கையாளும் முறைகள் குறித்தும், கலவரத்தை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கி ஒத்திகை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளா் சுப்பையா, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் மாா்ட்டின் மற்றும் ஆயுதப்படை காவலா்கள் கலந்து கொண்டனா்.