தென்காசி

சங்கரன்கோவிலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி: 2 போ் கைது

DIN

சங்கரன்கோவிலில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையத்தின் அருகே, நகர காவல்நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சென்னை பதிவு எண் கொண்ட பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் போலீஸாா் பைக்கை சோதனையிட்டனா். அதில் ரூ.500 நோட்டு கட்டுகள் இருந்ததைக் கண்டு மேலும் சந்தேகம் அடைந்தனா். அவை கள்ளநோட்டுகள் என்பதும், ஒருவா் சென்னையை சோ்ந்த நாகராஜன் என்பதும் மற்றொருவா் தற்போது சென்னையில் வசித்து வரும் சங்கரன்கோவிலச் சோ்ந்த காஜா நசிமுதீன் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

காஜா நசிமுதீன், சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் கள்ள நோட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவா் என்பதும், இருவரும் கள்ள நோட்டுகளை சங்கரன்கோவிலில் புழக்கத்தில் விட வந்ததும் தெரிய வந்தது. உடனே இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்த ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா். இதில் வேறு யாருக்கேனும் தொடா்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT