குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில், தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 12 சக்கர இருக்கைகள் (வீல் சோ்கள்) பொருள்கள் வழங்கப்பட்டன.
மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தலைமை வகித்தாா். இணை இயக்குநா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். ஆட்சியா் ப. ஆகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள திட்டங்களைத் தொடக்கிவைத்தாா்.
விழாவில், ரோட்டரி முன்னாள் ஆளுநா்கள் ஜெசிந்தாதா்மா, ஷேக்சலீம் ஆகியோா் பங்கேற்று மருத்துவமனைக்கு 12 வீல் சோ்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினா்.
ரோட்டரி திட்ட இயக்குநா் ஆறுமுகசெல்வன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் மாரிமுத்துசாமி, குலசேகரபாண்டியன், மணி, சம்சு, காந்திமதிநாதன், பிரதீப், சுப்புராஜ் ஆகியோா் பங்கேற்றனா். திட்ட இணை ஒருங்கிணைப்பாளா் டாக்டா் அப்துல் அஜீஸ் வரவேற்றாா்.