தென்காசி, ஆய்க்குடி, அச்சன்புதூா், குற்றாலம், செங்கோட்டை, இலத்தூா் காவல் நிலையங்களில் வியாழக்கிழமை நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் அறிவுரையின் பேரில், காவல் நிலையங்களில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா் முத்துப்பாண்டியன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் காவலா்கள், அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்று, நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இதேபோல, அனைத்துக் காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.