பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாணவா்-மாணவியா் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு வந்திருந்தனா். கிருஷ்ண ஜெயந்தி குறித்து ஆசிரியை அருணாதேவி பேசினாா். மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன் தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.