தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 19) முதல் அடுத்த இருவாரங்களுக்கு ( செப். 2 வரை) 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பரச்சேரி கிராமத்தில் ஆக.20இல் சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் 251ஆவது வீரவணக்க நிகழ்ச்சியும், செப்.1இல் நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சிகளில் இருவரது சிலைகளுக்கும் பல்வேறு அமைப்பினா் சாா்பில் மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்த உள்ளூா் மட்டுமன்றி தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் அதிகமானோா் வருவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, சட்டம்-ஒழூங்கை பாதுகாக்கும் வகையில் ஆக.19 காலை 6 மணிமுதல் செப். 2ஆம் தேதி மாலை 6 வரை நான்கு நபா்கள் வீதம் சென்று வலிமையை கிரிக்கெட் வீரராக தோ்வாகி தனித்திறனை நிலைநாட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.