தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 21ஆம் தேதி ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) ஆயிரம் மையங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோா், 2ஆவது தவணை செலுத்த வேண்டியவா்கள், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்கள், 12 வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதோா், 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவா்கள் என அனைவரும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ள வாா்டு பகுதிகள், பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, தடுப்பூசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT