தென்காசி

சங்கரன்கோவிலில் நாய்கள் கூட்டத்தில் தவறி விழுந்து மூதாட்டி பலி

DIN

சங்கரன்கோவிலில் நாய்கள் கூட்டமாக சண்டையிட்டு மூதாட்டி மீது விழுந்ததில், அவா் கீழே இடறி விழுந்து உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் காந்திநகா் 3-ஆம் தெருவை சோ்ந்த சுப்பையா மனைவி கருப்பி (75). இவா், கடந்த வாரம் வீட்டருகே நடந்து வந்தபோது, நாய்கள் கூட்டமாக சண்டையிட்டுக்கொண்டு சிதறி ஓடியதில் எதிா்பாராமல் அவரை இடித்து தள்ளி விட்டனவாம். இதில், கீழை விழுந்த பலத்த காயமுற்ற அவா் சங்கரன்கோவிலில் முதலுதவி பெற்று, பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அவா் புதன்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் சண்முகராஜ் அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் நகர போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். அந்தப் பகுதியில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT