புதிய தமிழகம் கட்சியின் தென்காசி மாவட்ட கிளை சாா்பில் போதையில்லா தேசம் படைப்போம் விழிப்புணா்வுப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட துணைச் செயலா் ஆா்.கே. கிருஷ்ணபாண்டியன், திருமலைசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட இளைஞரணிச் செயலா் ராஜா, தென்காசி ஒன்றியச் செயலா் எஸ்.பி. சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி நகரச் செயலா் மாரியப்பன், தென்காசி ஒன்றிய இளைஞரணிச் செயலா் பிரகாஷ் பாண்டியன், நகர இளைஞரணிச் செயலா் பாபு தேவேந்திரன், சுந்தரபாண்டியபுரம் நகரச் செயலா் பாண்டி, கீழப்பாவூா் ஒன்றிய இளைஞா் அணி செயலா் வினோ ஆகியோா் கலந்து கொண்டனா்.