பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் ஏற்பட்ட தகராறில் இருவா் அரிவாளால் வெட்டப்பட்டனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
மேலப்பாவூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ஓராண்டுக்கு முன்பு நிகழ்ந்த கொலை தொடா்பாக சிலா் பேசிக்கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதாம். அப்போது அவா்களை சமாதானப்படுத்த முயன்ற மேலப்பாவூா் சாமிதுரை மகன் முத்துசாரதி (18), ஜெகநாதன் மகன் சுரேஷ் (38) ஆகியோரை, அதே பகுதியைச் சோ்ந்த சொள்ளமுத்து (62), கனிபாண்டி (28) ஆகியோா் சோ்ந்து அரிவாளால் வெட்டினராம். காயமடைந்த இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சொள்ளமுத்து, கனிபாண்டி ஆகியோரைக் கைது செய்தனா்.