சுதந்திரதின விழாவை முன்னிட்டு தென்காசியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தென்காசி லக்க்ஷனா ஆா்த்தோ மருத்துவமனையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமுக்கு ஈ. ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தாா். தனுஷ் எம்.குமாா் எம்.பி. முகாமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மேலநீலிதநல்லூா் ஒன்றிய திமுக செயலா் பெரியதுரை, சாந்தசீலன், நகர இளைஞரணி அப்துல் ரஹீம் கலந்து கொண்டனா்.
மருத்துவா்கள் பிரபாகரன், பொன் பவித்ரா தேவி தலைமையிலான மருத்துவ குழுவினா் இலவசமாக சிகிச்சை அளித்தனா்.