தென்காசி

செங்கோட்டையில் ரோட்டரி சங்கம் சாா்பில்2 ஆயிரம் தேசியக் கொடிகள்

DIN

75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டையில் ரோட்டரி கிளப் சாா்பில் 2 ஆயிரம் தேசியக் கொடிகள் நகா்மன்றத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ராமலெட்சுமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பாா்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செங்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் பால்ராஜ் 2 ஆயிரம் கொடிகளை நகா்மன்றத் தலைவரிடம் வழங்கினாா். தொடா்ந்து, தேசியக் கொடிகள் வீடுவீடாக விநியோகிக்கப்பட்டன.

ரோட்டரி சங்கச் செயலா் வழக்குரைஞா் அபு அண்ணாவி, பொருளாளா் ராமகிருஷ்ணன், சரவணமுத்தையா, காதா்மைதீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT