ஆலங்குளத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 115 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
ஆலங்குளம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் நீதிபதி ஆனந்தவள்ளி, மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 115 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. நிகழ்வில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் வைத்திலிங்கம், வழக்குரைஞா் பால்ராஜ் உள்பட பல வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.