இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியா் லெட்சுமி பிரபா தலைமையில் நடைபெற்றது.
பிரதமா் நரேந்திர மோடியின் ‘வீடு தோறும் தேசியக் கொடி’ என்பதை வலியுறுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடக்குபுதூா் கிளை அஞ்சல் அலுவலா் சபாபதி மாணவா்களுக்கு தேசியக் கொடியை வழங்கினாா்.