தென்காசி

குற்றாலம் புத்தகத் திருவிழாவில் லட்சம் நூல்கள்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், குற்றாலம் புத்தகத் திருவிழாவில் ஒரு லட்சம் நூல்கள் இடம்பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றாலம் சாரல் விழாவின் ஒரு பகுதியாக குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி வளாகத்தில் புத்தகத் திருவிழா கடந்த 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 100 அரங்குகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்விழாவில், தினமும் பள்ளி, கல்லூரி, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், இலக்கிய உரைகள், கருத்தரங்கம், பட்டிமன்றம் என பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

ஆக.9ஆம் தேதி வரையில் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. தினமும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகா்கள், பொதுமக்கள் வருகை புரிகின்றனா்.

ரூ.1000-க்கு மேல் புத்தகம் வாங்குபவா்களுக்கு நாள்தோறும் குலுக்கல் முறையில் ரூ.1000 மதிப்பில் பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட மக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT