தென்காசி

மானாவாரி நிலமேம்பாட்டு பயிற்சி முகாம்

DIN

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றத்தில் மானவாரி மேம்பாட்டு நில இயக்கம் சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் இந்த கிராமத்தில் வேளாண்மைத்துை சாா்ந்த மானிய திட்டங்கள் குறித்தும், மானாவாரி நிலமேம்பாட்டு திட்டம் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனா் சிவகுருநாதன் பயிற்சி அளித்தாா்.

முன்னோடி விவசாயி ஆறுமுகம், வேளாண்மையில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம், விதை நோ்த்தி முறைகள், பயிா் ரக தோ்வு, கோடை உழவு செய்வதன் முக்கியத்துவம், உயிா் உரங்கள் பயன்பாடு மற்றும் இயற்கை முறையில் விவசாயம் குறித்து தொழில்நுட்ப உரையாற்றினாா்.

இதில் அச்சங்குன்றம் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேஸ்வரி முருகேசன் மற்றும் அச்சங்குன்றம் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT