தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் திங்கள்கிழமை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களின் பணிநேரத்தை நீட்டிக்கும் மருத்துவ விரோத அரசாணை 225 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாடத்துக்கு, தமிழ்நாடு மாவட்ட மருத்துவ சங்க மாவட்டத் தலைவா் இரா.ஜெஸ்லின் தலைமை வகித்தாா். செயலா் முகம்மது இப்ராஹிம் , பொருளாளா் ராஜேஷ் கண்ணா, இணை பொதுச்செயலா் காா்த்திக் அறிவுடை நம்பி , ராஜலட்சுமி, சங்கரி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் ( பணி மருத்துவா்கள் தவிர ) அனைவரும் கலந்து கொண்டனா்.